சோள ரவை உப்புமா
சோள ரவை---ஒரு கப்
புளி --------சின்ன எலுமிச்சை பழ அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணை----இரண்டு ஸ்பூன்
கடுகு------------ அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ---ஒரு ஸ்பூன்
பெருங்காயம் ---- கால் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்---நான்கு பாதியாக கிள்ளியது
கறிவேப்பிலை இலை-------ஐந்து
உப்பு --------------தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை இலை பெருங்காயம் போடவும்.பிறகு புளியை தண்ணீர் ஊற்றி மூன்று கப் அளவு கரைத்து வாணலியில் ஊற்றவும். உப்பு போடவும்.நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சோள ரவையை போட்டு நன்றக கிளறவும்.நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
குக்கரிலும் வைக்கலாம்.
இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்
சோள ரவை உப்புமா டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு
சோள ரவை உப்புமா
சோள ரவை - 2 கப்
தண்ணீர் - 3 கப்
வரமிளகாய் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பொடிதாக நறுக்கியது - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போடவும், கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி அதில் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கிளறவும். அதன் பின்பு அதில் சோள ரவையை போட்டு வாசனை வரும் வரை கிளறி தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கிளறி மூடி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் புழுங்க வைக்கவும். வெந்ததை சரி பார்த்து இறக்கவும்
சோள தோசை
சோளம் - 1 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 tsp
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சோளத்தை சுடு நீரில் 8 மணி ஊறவைக்கவேண்டும்.
அரிசி உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒன்றாக அரைத்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விட்டு தோசையாக வார்த்தெடுக்கவும்.
எள்ளு பொடியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சோளம் சுண்டல்
சோளம் - 2 கப் (உதிர்த்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
எலுமிச்சம்பழம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
சோளத்தை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு வதக்கவும். வதங்கியதும் வேகவைத்த சோளத்தை போட்டு கிண்டி விடவும். இறக்கும் முன்பு தேங்காய்த்துருவலையும், எலுமிச்சைச்சாறும் சேர்த்து இறக்கவும்.
சோள அடை
துவரம்பருப்பு - 2 கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
உளுந்து - கால் கப்
பயத்தம்பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மி.லி
செய்முறை
பருப்புகளை ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி கனமான அடையாக ஊற்றி பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.
சோள சோறு
சோளம் - 1 டம்ளர்,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை
- சோளத்தை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும். உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
- 6 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சோளத்தை போட்டு, கிளறி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- குக்கரில் வைப்பதானால் சோளம், உப்பு போட்டு கலந்த பிறகு, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- வெந்த பிறகு, எடுத்து கரண்டியாலோ, மத்தாலோ லேசாக மசிக்கவும்.
Note:
சூடாக குழம்புடன் தொட்டு சாப்பிடலாம். உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மோர் விட்டு கரைத்தும் குடிக்கலாம். (உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்). தொட்டுக் கொள்ள கார குழம்பு, மோர் குழம்பு பொருத்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment