.jpg)
கேரட்டில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் வைட்டமின் ஏ என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் இன்றியமையாதது. மேலும் கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு தேவையான சத்தான பீட்டா கரோட்டீன் உடலுக்கு அதிகம் கிடைத்து, கண் பார்வை கூர்மையாகும். ஆகவே இத்தகைய சக்தி வாய்ந்த கேரட்டை ஜூஸ் மட்டும் போட்டு குடிக்காமல், அதனை சற்று வித்தியாசமாக மஞ்சூரியன் செய்தும் சாப்பிடலாம்.
1. கேரட் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ (வட்டமாக நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), வெங்காயம் - 1 (நறுக்கியது),
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது), தக்காளி சாறு - 5 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன், சோயா சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்,
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு ,எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
மாவிற்கு...
மைதா மாவு - 1/4 கப், சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அடுத்து ஒரு கப்பில் சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு, அதனை வாணலியில் ஊற்றி, ஒரு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கினால், சுவையான கேரட் மஞ்சூரியன் ரெடி. இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால், சுவையாக இருக்கும்.
2. கேரட் சாதம்
தேவையான பொருட்கள்:
கேரட் - 2 (பொரியது மற்றும் துருவியது) அரிசி - 1 1/2 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது) கிராம்பு - 2 ஏலக்காய் - 6 பட்டை - 2 இன்ச் சர்க்கரை - 5-6 டேபிள் ஸ்பூன் நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை) பால் - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய கேரட், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் அரிசி சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, தீயை சற்று உயர்த்தி, 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின் தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான கேரட் சாதம் ரெடி. இதன் மேல் நட்ஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்துஅலங்கரித்து பரிமாறலாம்.
No comments:
Post a Comment