தேங்காய் புட்டு
தேவையான பொருட்கள்
அரிசி மாவு : 1/4 கப் , தேங்காய் துருவல் : 3 ஸ்பூன் ,
நெய் : சிறிதளவு , முந்திரி பருப்பு : 5 - 6 ,
சர்க்கரை : 3 ஸ்பூன் , பால் : தேவையான அளவு,
ஏலக்காய் பொடி : சிறிதளவு.
செய்முறை :
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடர் செய்யவும் .
தேங்காய் துருவல் , முந்திரி இரண்டையும் நெய் விட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொடித்த சர்க்கரை , தேங்காய் துருவல் + முந்திரி பொடித்த கலவை , ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து கலந்து தேவையானால் பால் விட்டு உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசறிக்கொள்ளவும் . கடைசியாக சிறிது நெய் சேர்த்து கலந்து கொழுக்கட்டை போல பிடித்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடுசெய்து பிடித்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் லேசாக நெய் விட்டு 5 நிமிடம் வேகவிடவும். நடுவில் ஒரு முறை உருண்டைகளை ஸ்பூனால் திருப்பிவிடவும்.
கையால் தொட்டுபார்க்கவும். ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment