அவரைக்காய் சமையல் (4)

                                      1. அவரைக்காய் - வேர்க்கடலை பொரியல் 


தேவையான பொருட்கள்


அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - சிறிது
வறுத்து பொடிக்க:
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
அரிசி - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி

செய்முறை

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அரிசியையும், வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
  3. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அவரைக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  5. காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
  6. சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி. பருப்பு சாதத்திற்கு ஏற்றது. வெறும் சாதத்தில் பிரட்டி சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


2. அவரை மசாலா 


தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 200 கிராம்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
அரைக்க:
தேங்காய் துண்டு - ஒன்று(சிறியது)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை  

  1. அவரைக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  4. அரைத்த மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும்.
  5. அதில் அவரைக்காய், உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும்.
  6. தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான அவரை மசாலா ரெடி.

3. அவரை முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்

பட்டை அவரை ....1/4கிலோ
முட்டை- 1
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பில்லை - சிறிதளவு
தாளிக்க:
வெங்காயம் - வெட்டியது கொஞ்சம்
கடுகு - தேவைக்கு
காய்ந்தமிளகாய் -2
 
செய்முறை  
  1. அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்...கொஞ்சம் உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்..
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளாகையை ரெண்டாக உடைத்து போடவும்..பின் கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
  3. வேகவைத்த அவரைக்காயை சேர்க்கவும் அவரையில் உள்ள தண்ணீர் வற்றியதும்,முட்டையை அப்படியே உடைத்து ஊற்றவும்..
  4. கிளறிவிட்டு முட்டை சுருண்டு அவரையுடன் சேரும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

4.அவரைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 20
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
தேங்காய் பூ - 2 மேசைக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - பாதி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


செய்முறை 
  1. அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும். துவரம் பருப்பை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குழையாத அளவிற்கு வேக வைத்து எடுக்கவும்.
  2. பொடியாக நறுக்கிய அவரைக்காயை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைக்கவும்.
  3. வேகவைத்த அவரைக்காயை நீரை வடித்து எடுத்து, அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளிப் போட்டு வதக்கி, பின்னர் கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 30 விநாடி வதக்கவும்.
  5. அதில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள அவரைக்காயைப் போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி விடவும்.
  6. அவரைக்காய் வெந்த பிறகு வேகவைத்த பருப்பையும், தேங்காயையும் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
  7. சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகை சாதத்திற்கும் பக்க உணவாக இந்த அவரைக்காய் துவட்டலைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  1.  

No comments:

Post a Comment