Wednesday, 21 August 2013

ஜூஸ் வகைகள்

மாங்காய் சர்பத்


சந்தையில் மாங்காய், வரத்தொடங்கியிருக்கும் வேனிற்காலத்தில் இவற்றை உபயோகப்படுத்தி, மாங்காய் ஊறுகாய், தொக்கு போன்றவை மட்டுமல்ல, சர்பத்தும் செய்யலாம். பொதுவாக ஜூஸ் செய்ய மாம்பழத்தையே உபயோகப் படுத்துவது நம் வழக்கம். ஆனால், மாங்காயையும் உபயோகப்படுத்தி சத்துள்ள சர்பத் செய்யலாம். பி-1,பி-2, நியாசின், மற்றும் வைட்டமின் சி போன்ற உயிர்ச்சத்துகளைக் கொண்ட மாங்காய், நம் உடல் கோடைக்காலத்தில் இழக்கும் சோடியத்தின் அளவை ஈடு கட்டுகிறது. உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இந்த சர்பத்தைத் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையைக் கட்டுப்படுத்த முடியும். உடற்சூட்டைத் தணிப்பதுடன், சூட்டினால் வரும் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறுகள் போன்றவையையும் தவிர்க்கலாம். “ஆம் பன்னா” என்ற பெயருடன் வட மேற்கு மாநிலங்களிலும், “கைரி கா சர்பத்” என்ற பெயரில் மராட்டிய மாநிலத்திலும் வழங்கப்பட்டு வரும் இந்த சர்பத்தைச் செய்வது மிகவும் எளிது. வேண்டிய அளவு செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது கலந்து கொள்ளலாம்.

தேவையானவை:

மாங்காய் – 1 (பெரியது)
வெல்லம் – கால் கிலோ
வறுத்துப் பொடித்த சீரகம் – 1 தேக்கரண்டி
இந்துப்பு அல்லது ராக் சால்ட் -கால் தேக்கரண்டி.

செய்முறை:

மாங்காயை நன்கு கழுவித் துடைத்து விட்டுக் கத்தியால் அதன் மேல் அங்கங்கே லேசாகக் கீறி விட்டுக் கொள்ளவும். பின் அதைத் தோல் நன்கு மிருதுவாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைப்பதனால் ஒரு விசில் போதும்.

வெந்த மாங்காயை நன்கு ஆற விட்டு, பின் தோலுரிக்கவும். ஒரு கரண்டியின் உதவி கொண்டு, சதைப்பற்றான பாகத்தை நன்கு வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் கரைய விட்டு, கல் மண் போக வடிகட்டிக் கொள்ளவும். பின் இந்தக் கரைசலுடன் மேலும் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் நன்கு கொதி வந்ததும், அரைத்த மாங்காய், சீரகப்பொடி, இந்துப்புப்பொடியைச் சேர்க்கவும். லேசாகக் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் பாட்டில்களில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம். வெளியில் வைத்திருந்தால் சீக்கிரமே கெட்டு விடும்.

பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், அதன் அடர்த்திக்கேற்பக் குளிர் தண்ணீரைக் கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத்
தூவிப் பரிமாறவும்.

ஜவ்வரிசி ஜிகர்தண்டா


ஜவ்வரிசி வயிற்றுப் புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர், வயிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசிப் பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால் வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும். வாயில் வரும் கொப்புளங்கள், வாய்ப் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது, வாங்க எப்படிச் செய்வதுன்னு பார்ப்போம்.

தேவையானவை

பால் - 1  டம்ளர்
ஜவ்வரிசி – 2 மேசைக் கரண்டி
பாதாம் பிஸின் – ஒரு தேக்கரண்டி
ரூ ஆப்சா -2 மேசைக் கரண்டி
ஐஸ்கிரீம் – ஒரு குழிக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு
பிஸ்தா பிளேக்ஸ் – அலங்கரிக்க

 செய்முறை
  • பாதாம் பிசினை இரவே ஊற வைக்கவும்.
  • ஜவ்வரிசியைப் பத்து நிமிடம் ஊற வைத்து, பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • வெந்ததும் ஆற வைத்து அத்துடன் ஊறிய பாதாம் பிசின்,  மற்றும் ரூஆப்சா எசன்ஸையும், தேவைக்குச் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்துக் குடிக்கவும்.
  • சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடணும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்.
தக்காளி ஸ்குவாஷ்.

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த தக்காளி -1 1/2 கிலோ.
  • தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் மிக்சியில் அடித்து வடி கட்டவும்.
  • ஒரு லிட்டர் ஜுஸ் இருந்தால் ஒன்றரை கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் மூன்றையும் சேர்த்து பாகு தயாரித்து ஆற வைத்து, தக்காளி ஜூஸுடன் கலக்கவும்.
  • டொமேடொ ரெட் கலரை தண்ணீரில் கரைத்து, 3/4 தேக்கரண்டி ‘சோடியம் பென்சோயேட்’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
  • பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், அதன் அடர்த்திக்கேற்பக் குளிர் தண்ணீரைக் கலந்து சாப்பிடலாம். 
லஸ்ஸி.
  • நான்கு கப் கெட்டித் தயிரில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு,மற்றும் எட்டு தேக்கரண்டி சீனி போடவும்.
  • இதனை மிக்சியிலிட்டு ஐஸ் கட்டிகளும் போட்டு நுரை வரும் வரை அடிக்கவும்.
  • இதனை உடனே குடிக்க வேண்டும்.
லெமன் க்ரஷ்.
  • ஒரு லிட்டர் எலுமிச்சை சாறு இருந்தால் இரண்டு கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பாகு தயாரிக்கவும்.
  • பாகு ஆறிய பின்பு பழச் சாறு , லெமன் எசென்ஸ் 4 தேக்கரண்டி, சிறிதளவு லெமன் மஞ்சள் கலர் பவுடர்,  தண்ணீரில் கரைத்த 3/4 தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’ சேர்த்து பாட்டிலில் 
  • நிரப்பவும்.பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், குளிர் தண்ணீரைக் கலந்து சாப்பிடலாம். 
லெமன் பார்லி ஸ்குவாஷ்.
  • எலுமிச்சை பழச் சாறு 1 லிட்டர் இருந்தால் பார்லி மாவு 3 தேக்கரண்டி எடுத்து, கட்டி தட்டாமல் சிறிது  தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • 1.6 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் கரைத்து வைத்திருக்கும் பார்லி மாவை கலக்கவும்.
  • மாவு வெந்த பின்பு 1.4 கிலோசீனி சேர்த்து, சீனி கரைந்ததும்சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு கலந்து வடி கட்டவும்.
  • பாகு நன்றாக ஆறியவுடன் பழச்சாறு, 2தேக்கரண்டி லெமன் எசென்ஸ், சிறிது தண்ணீரில் கரைத்த முக்கால் தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’  என்ற மருந்து மூன்றையும் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
  • பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், குளிர் தண்ணீரைக் கலந்து சாப்பிடலாம். 
கிரேப் சர்பத்:
சீனி – 600கிராம்,
தண்ணீர் -300 மில்லி லிட்டர்,
சிட்ரிக் ஆசிட் – 1தேக்கரண்டி,
கிரேப் எசென்ஸ் -1தேக்கரண்டி,

  • சீனி, தண்ணீர், சிட்ரிக் ஆசிட், மூன்றையும் சேர்த்து சர்க்கரைப் பாகு தயாரிக்கவும்.ஆறிய பின்பு, வடிகட்டி குளிரச் செய்யவும். 
  • குளிர்ந்த சர்க்கரைப் பாகுடன் 1 தேக்கரண்டி கிரேப் எசென்ஸ் சேர்க்கவும்.
  • இந்த சர்பத்துக்கு கலர் பவுடர் தேவை இல்லை. இயற்கையாகவே இருக்கும் நிறமே போதுமானது. 
  • ஒரு அளவு சர்பத்துடன் மூன்று அளவு தண்ணீர் சேர்த்து பருகவும்.


அன்னாசி சர்பத் :
  • கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அதனுடன் 1 தேக்கரண்டி அன்னாசி எசென்ஸ் சேர்க்கவும்.
  • லெமன் எல்லோ கலர் சேர்க்கவும்.





நன்னாரி சர்பத் :


  • கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அத்துடன் 2 தேக்கரண்டி நன்னாரி எசென்ஸ் சேர்க்கவும்.
  • லெமன் எல்லோ கலர் சேர்க்கவும்.





ஆரஞ்சு சர்பத்:
  • கிரேப் சர்பத் போல் தயாரிக்கும்போது செய்ததைப்போல் பாகு தயாரித்து, அத்துடன் 1 தேக்கரண்டி ஆரஞ்சு எசென்ஸ் சேர்க்கவும்.
  • ஆரஞ்சு கலர் பவுடர் சேர்க்கவும்.



லெமன் சர்பத்:

  • கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அத்துடன் 1 தேக்கரண்டி லெமன் எசென்ஸ் சேர்க்கவும்.
  • லெமன் எல்லோ கலர் பவுடர் சேர்க்கவும்.



மேங்கோ ஸ்மூத்தி


தேவையானவைகள்:
பழுத்த மாம்பழம் பெரியது – 2
பால் – ஒரு கப்
ஐஸ் கட்டிகள் – 10
மேங்கோ எசன்ஸ் – 3 துளி
மேங்கோ ஐஸ் கிரீம் – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
சர்க்கரை – அரை கப்

செய்முறை
  • மாம்பழத்தை தோலுரித்து துண்டுகளாக வெட்டவும்
  • தேவையான பொருட்களில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்கு நுரை பொங்க
  • அடித்து கண்ணாடி தம்ளரில் ஊற்றி பரிமாறவும்
  • சுவையான மேங்கோ ஸ்மூத்தி ரெடி.




No comments:

Post a Comment