Monday, 12 August 2013

கொசு,கரப்பான் பூச்சி, எறும்பு, ஈ - வீட்டிலிருந்து விரட்ட


கொசுவை விரட்ட வழிகள்

சோற்றுக் கற்றாழை, நோய்களை விரட்ட மட்டுமல்லாமல், கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழை செடிகள் உள்ள இடங்களில், கொசுக்கள் வருவதில்லை. இதிலிருந்து வெளிப்படும் வாசனை மற்றும் வேதிப் பொருட்கள், கொசுக்களை விரட்ட உதவுகின்றன. செயற்கையான கொசு விரட்டிகள், மனிதர்களுக்கு அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், சோற்றுக் கற்றாழை,  மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாமல் கொசுக்களை விரட்டுகின்றன. சோற்றுக் கற்றாழையின் பயன்களை அறிந்த மக்கள், அவற்றை வீடுகளில் அலங்கார செடிகளுடன் சேர்த்து வளர்க்கின்றனர். குறிப்பாக, நுழைவாயில், ஜன்னல் போன்ற இடங்களில் தொட்டிகளில் வளர்க்கின்றனர். இதன் காரணமாக, கொசுக்கள் வீடுகளுக்குள் வருவது தடுக்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை இலைகள் (மடல்) முட்களுடன் காணப்படுவதால், பாதுகாப்பு தேவையில்லை. இதன் மடல்கள், அதிக ஈரப்பதத்தை தன்னுள் 
வைத்திருப்பதால், வீடும் குளிர்ச்சியாக நிலவுகிறது.



கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது


 வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் (படத்தில் உள்ளதுபோல்) அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்...கொசு போயே போச்சே!



கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.

 (அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

பூண்டு 
பூண்டை, தண்ணீர் விடாமல் அரைத்து ஜூஸ் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒருபங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். சது ரமாக வெட்டிய ஒரு துண்டுத் துணியை பூண்டுக் கரைசலில் முக்கி எடுத்து வீட்டுக்கு வெளியே வாசல் பக்கமாக தொங்க விடுங் கள். ஜன்னல் வழியாக கொசு உள் ளே வந்தாலும் வாசல் வழியாக ஓடிப் போய் விடும்!


கொசு தொல்லையிலிருந்து விடுபட ஒரு சில மாற்று வழிகள்!!!

  • எப்போதும் உடுத்தும் துணிகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.
  • உறங்கும் முன் சிறிது நல்லெண்ணெய் எடுத்து முகம், கை, கால்களில் தடவி கொள்ளவும்.
  • வசும்பு மற்றும் ஆரஞ்சு பழ தோலினை உலர வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியினை உபயோகபடுத்தி தூபம் போடவும்.

 " இந்த முறையினை பின்பற்றினால் கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்."

தேங்காய் நார்
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது. ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. 
இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 



பயமுறுத்தும் கரப்பான் பூச்சி களை ஒழிக்கணுமா?

போரிக் ஆஸிட் (ஹார்டு வேர் கடைகளில் கிடைக்கு ம்)  50 கிராம் வாங்குங்கள். அதோடு 100 கிராம் மைதா சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையுங்கள். சின்ன சின்னதாக சீடை போல உருட்டி ஒரு பிளாஸ் டிக் பேப்பரில் நன்றாக காய வையுங்கள். கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் காய வைத்த உருண்டைகளைப் போடுங்கள். கரப்பான் பூச்சிகள் காணாமல் போய்விடும். அப்புறம் சுவர், அலமாரிகளில் இடுக்கு இருந்தால் முதலில் அவற்றை அடைத்து விடுங்கள்.

எறும்புப் படை எரிச்சல் ஏற்படுத்துகிறதா?

இதோ அதற்கும் கைவசம் தீர்வு இருக்கிறது… முதலில் எறும்புப் புற்றைக் கண்டுபிடி த்து அங்கே ரெண்டு பல் பூண் டை நசுக்கிப் போட்டால் எறு ம்பு காணாமல் போய்விடும். இதுபோலவே புதினா வாச மும் எறும்பு க்குப் பிடிக்காது. ஒரு சின்ன தொட்டியில் புதி னாவை வளர்த்து, அதை சமையலறை ஜன்னல் ஓரமாக வைத்துவிடுங்கள். சமையலுக்குப் புதினாவும் ஆச்சு. எறும்பும் வராது! இன்னொரு கொசுறு டிப்ஸ்… எறும்பு வருகிற இடங்களில் மஞ்சள் தூளால் கோடு போட்டு வெச் சாலும் எறும்பு வராது. இப்ப தெரியுதா… நம்ம பெரியவங்க ஏன் வீட்டு வாசப்படிக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைச்சாங்கன்னு.

“ஈ” கூட்டத்தை விரட்டணுமா?

எந்த சீசனாக இருந்தாலும் இப் போதெல்லாம் ஈக்களின் தொல் லை தாங்க முடியவில்லை. சுத் தம்தான் ஈயின் முதல் எதிரி. அதையும், இதையும் கொட்டா மல் & கொட்டினாலும் உடனே ஈரத்துணியால் துடைத்து சுத் தம் செய்தால் ஈ வராது. அப்படி யும் ஈ வருகிறதா? கற்பூரத்தை ப் பொடித்து தண்ணீரில் கலக்கி வீடு துடையுங்கள். ஈ தொல் லை யே இருக்காது! அப்புறம் கறிவேப்பிலையுடன் நாலு கிராம்பு சேர்த்து கொஞ்சம் யூகலிப்டஸ் எண்ணெயில் நசுக்கி அதை சின் னச் சின்ன துணிகளில் முடிந்து ஜன்னல், வாசல் என எல்லா இடங் களிலும் வையுங்கள். ஈக்கள் ஓடியே போய்விடும்.


No comments:

Post a Comment