Friday, 16 August 2013

கேழ்வரகு மாவு - சமையல் (10)




சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது
கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.

அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.

கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு பக்கோடா 

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:

  • கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்புசேர்த்து கெட்டியாகப் பிசையவும். 
  • கடாயில் எண் ணெய் காயவைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும். 
  • கேழ்வரகில் இரும்பு ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத் து எல்லாம் இருக்கின்றன. மலச் சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.


கேழ்வரகு தோசை

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு - 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்



செய்முறை :

வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.

இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது.  இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.


கேழ்வரகு இனிப்பு அடை 
கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 க‌ப் (ராகி மாவு)
வெல்லம் - 1/2 கப்
துறுவிய தேங்காய் - 1/4 க‌ப்
ஏலக்காய் பொடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு




செய்முறை :
  • வெல்லத்தை உ‌தி‌ர்‌த்து ஒரு பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் போ‌ட்டு அ‌தி‌ல் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  • வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.
  • உ‌தி‌ரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
  • சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
  • கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.
  • சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற இ‌னி‌ப்பு அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

கேழ்வரகு முறுக்கு 

தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வெண்ணை அல்லது நெய் - 3 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:


  • 1/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.   
  •  ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எள், வெண்ணை அல்லது நெய், உப்பு ஆகியவற்றப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.  பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு மிருதுவாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்தெடுத்துக் கொள்ளவும்.   
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். 
  • முறுக்கு அச்சில் மூன்று கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும். 
  • கவனிக்க:  முறுக்கின் நிறம் கறுப்பாக இருப்பதால், முறுக்கு வெந்து விட்டதா என்பதை நிறத்தை வைத்து கணிக்க முடியாது.  எனவே முறுக்கை எண்ணையில் பிழிந்தவுடன் ஏற்படும் எண்ணையின் சலசலப்பு சத்தம் அடங்கியவுடன் எடுத்தால் சரியாக இருக்கும்.

கேழ்வரகு கார  அடை 

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
  • முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வதக்கிய பொருட்களை சேர்த்து , தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 
  • சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
  • கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.
  • சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற கார அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

கேழ்வரகு இட்லி 


தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 2 கப் ,
உளுத்தம்பருப்பு -3/4 கப் ,
உப்பு - 
தேவைக்கேற்ப.







செய்முறை:

  • உளுத்தம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • ஊறிய 
    உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்.
  • கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
  • கரைத்த கேழ்வரகு மாவுடன், உப்பு + அரைத்த உளுத்தம் மாவை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.
  • மாவை 8 - 10 மணி நேரம் 
    நன்றாக புளிக்கவைக்கவும்.
  • புளித்த இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.



கேழ்வரகு உருண்டை


தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு-2 கப்
நிலக்கடலை-1கப்
முந்திரி -10
வெல்லம்-1கப்
நெய்-சிறிதளவு


செய்முறை;-
  • கேழ்வரகு மாவை பிசைந்து அடையாக தட்டிக் கொள்ளவும்.தோசைக் கல்லில் போட்டு இருபக்கமும்
  • வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  • முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
  • அடையை ஒன்றிண்டாக பிய்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் நிலக்கடலை
  • முந்திரி முதலியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்ததை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு நெய் விட்டு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.

கேழ்வரகு, பார்லி அடை
தேவையான பொருட்கள்: 
கேழ்வரகு மாவு - 2 கப் 
வேகவைத்த பார்லி - 1 கப் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 ஸபூன் 
வெங்காயம் - 1 
ப.மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை
• வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 
• கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும் 
• ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.) 
• மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும். 
• இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.
ராகி புட்டு & உப்புமா

தேவையான பொருட்கள்: 


ராகி மாவு - ஒரு கப் 
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். ராகி மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வறுக்கவும்.
  • மாவு ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறவும். ஈரப்பதம் சரியாக இருக்க வேண்டும். மாவின் பதம் கையால் பிடித்தால் கொழுக்கட்டை போல பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். பிசறிய மாவை 15 நிமிடம் ஊற விடவும்.
  • புட்டு குழாயில் (அ) இட்லி தட்டில் அடியில் சிறிது தேங்காய் வைத்து அதன்மேல் மாவை நிரப்பி மீண்டும் மேலே தேங்காய் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
  • 10 முதல் 15 நிமிடத்தில் புட்டு வெந்து விடும்.
  • உப்புமா செய்ய வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்திற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் வேக வைத்த புட்டை உதிர்த்து சேர்த்து கிளறி இறக்கவும்.
  • சுவையான ராகி புட்டு & உப்புமா தயார். சட்னி அல்லது சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 லெமன் ராகி சேமியா
தேவையான பொருட்கள்: 
ராகி சேமியா - 200 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 முதல் 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
  • தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ராகி சேமியா மூழ்கும் வரை ஊற்றி தனியே 5 நிமிடம் மூடிவைத்து பின்னர் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  • வேகவைத்து வடிகட்டிய ராகி சேமியா, வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை இந்த கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறி இறக்கவும்.
  • குறிப்பு :ராகி சேமியாவை குளிர்ந்த நீரில் அலசிய பின் சுத்தமான துணியில் பரவலாக வைத்தால் அதிக நீரை துணி உறிஞ்சி விடும். சேமியா ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்.





No comments:

Post a Comment