பீட்ரூட் பயாசம்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாஙகக, தோல் அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்குவெல்லம் மற்றும் ஏலக்காய், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். இது பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் தினமும் குடிக்கலாம்.
முருங்கைக்கீரை சூப்: கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றைக சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். அசத்தலான இருப்பு சக்திக்கான சூப் ரெடி.
இரத்தம் அதிகரிக்கும் பழ சாலட்: கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடியே சாப்பிடலாம்.
ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்: கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவினால் காய்கறி சாலட் ரெடி.
கொத்தமல்லி ஜூஸ்: ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து 100 கிராம் வெல்லம் சுவைக்கு சேர்த்தால் ரத்த அழுத்தத்தை சீராக்கி, பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
காலி பிளவரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறையாவது உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை வாரம் இருமுறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
உடலின் எடையை கட்டுப்படுத்தும் திறன் காலி பிளவருக்கு உண்டு. சேலட், கோபி மஞ்சூரியன் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது. வாரத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் காலி பிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
வாழைப்பூ சூப்: வாழைப்பூவை சிறு துண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சுவைக்கு வெள்ளம் சேர்க்கலாம். சுவையான வாழைப்பூ சூப் தயார்.
புதினா சூப்
புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.
புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
புதினா ஜூஸ்: புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், எலுமிச்சை பழ சாறு பிழிந்து, சுவைக்கு வெல்லம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். இது வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச் சீராக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும்.
முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளிதாக கிடைக்கக் கூடியது. நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு. அதில் முக்கியமானது முலாம்பழம். இப்பழம் உடலை குளிர்ச்சியாக வைப்பதில் முக்கிய பங்கு வகுகின்றது.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.
இப்பழத்தில் போலிக் அசிட் அதிகம் உள்ளதால் பேறு காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய பழம். முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து. சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இவர்கள் முலாம்பழத்தை சாப்பிட்டு வர பால் நன்றாக சுரக்கும்.
இப்பழத்தில் புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ', "சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.
No comments:
Post a Comment