பனிமய மாதாஆலயம்
தூத்துக்குடி நகரில் பீச்ரோட்டில் அமைந்து உள்ளது பனிமயமாதா ஆலயம். இந்த கோவிலில் உள்ள சொரூபம் கடந்த 1555-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி சந்தலேனா என்ற கப்பலில் இலங்கை காலே துறைமுகம் வழியாக தூத்துக்குடி வந்தடைந்தது. உலகின் முதன்மை அதிபேராலயமான மேரி மேஜருடன் 1960-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி புனித மரியன்னை ஆலயம் வணக்கம் மிகு ஆலய்ங்களுள் ஒன்றாக அருளப்பரால் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆலயம் 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி திருதந்தை 2-ம் அருள் சின்னப்பரால் உயர்த்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 1983-ம் ஆண்டு மரியன்னை திருத்தலம் பசிலிக்கா பேராலயமாக திருநிலைப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்டசெந்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் மணப்பாடு கிராமத்தில் திருச்சிலுவை ஆலயம் அமைந்துள்ளது புகழ் பெற்ற ரோமன் கத்தோலிக்கக்கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்று. மிகப்பழமையான இந்த ஆலயத்தில்வைக்கப்பட்டு உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். எனவே இது சின்ன ஜெருசலேம் என்றே அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக விளங்கும் இங்கு புனித சவேரியார் வருகை புரிந்துள்ளார். இது தவிர மூக்குபீறி தூய மார்க்கு ஆலயம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள மணல்மாதா ஆலயம் மெஞ்ஞானபுரத்தில் உள்ள பரிசுத்த பவுலின் ஆலயம் புளியம்பட்டியில் உள்ள அந்தோணியார் ஆலயம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சந்தியாகு அப்பர் ஆலயம் சாயர்புரத்தில் உள்ள தூய திருத்துவ ஆலயம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி விண்ணேற்பமாதா ஆலயம் ஆகியவை கிறிஸ்தவர்களின் முக்கிய ஆலயங்களாகும்.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதிலும் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயங்களுக்கு பிற மதத்தவரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
உவரிஅந்தோணியார்ஆலயம்
நெல்லை மாவட்டம் உவரி கடற்கரையில் கோவா மிஷனாிகளால் 1903 - ம் ஆண்டு கட்டப்பட்டது கப்பல் மாதா ஆலயம் அன்றைய காலகட்டத்தில் பள்ளிக் கூடமாகவும் இருந்தது. பழைய ஆலயம் பழுதடைந்ததால் 1970-ம் ஆண்டு பாதர் தாமஸ் என்பவரால் புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1974-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. புதிய ஆலயம் கப்பல் வடிவில் கட்டப்பட்டதால் இதனை கப்பல் மாதா ஆலயம் என்றே மக்கள் அழைக்கிறார்கள். மேலும் உவரியில் உள்ள அந்தோணியார் ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
No comments:
Post a Comment