அதிரப்பள்ளி அருவி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையார் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது.
அதிரப்பள்ளி அருவியின் தோற்றம்
சுற்றுலா
அதிரப்பள்ளி அருவிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவிலுள்ள சாலக்குடியில் உள்ளது ஆகும். வானூர்தி நிலையம் 54 கிமீ தொலைவிலுள்ள கொச்சி பன்னாட்டு நிலையமாகும். திருச்சூர் 58 கிமீ தொலைவில் உள்ளது. சாலக்குடியில் இருந்து வாடகை மகிழுந்துகள் மூலமும் பேருந்துகள் மூலமும் இவ்வருவிக்கு எளிதில் செல்லலாம்.
இந்த அருவிக்கு இந்தியா முமுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தின் நீர் வரத்து நன்கு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சிறந்ததாகும்.
திரைப்படம்
திரைப்படங்கள்
அருவி அமைந்த பகுதி மிக அழகாக இருப்பதன் காரணமாக இது திரைப்படம் எடுப்பவர்களை கவர்ந்துள்ளது. பல்வேறு மலையாளப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. 1996 ல் கமல்ஹாசன் நடித்த தமிழ் படமான புன்னகை மன்னன் இங்கு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் புன்னகை மன்னன் அருவி என்று இதற்கு பட்டப்பெயர் உண்டு. இருவர் திரைப்படத்தில் வரும் நறுமுகையே நறுமுகையே என்ற பாடல் இங்கு எடுக்கப்பட்டதாகும். இராவணன் திரைப்படத்திலும் இவ்வருவிப்பகுதி இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment