.jpg)
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் நாலுமாவடியை அடுத்து உள்ளது வன திருப்பதி கோவில். இக்கோயில் சென்னை ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் கட்டியுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி போன்று குட்டித் திருப்பதியாக குக்கிராமத்தில் புண்ணை நகாில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள். ஆந்திரா மாநிலம் செல்ல முடியாதவர்கள் வன திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசித்து நிம்மதியுடன் செல்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் பக்தர்க்ள குவிகிறார்கள். தினசரி காலை 7 மணி முதல் பகல் 1 மணிவரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடைதிறந்திருக்கும். இங்கு வரும் பக்தர்கள் உண்டியல் போட தேவையில்லை. எங்கும் உண்டியல் வைக்கப்படவில்லை. இலவச தரிசனமாக திருப்பதியை வணங்கி பூஜை நேரங்களில் பிரசாதம் பெற்றுச் செல்லலாம். இங்கு சுமங்கலி பெண்களுக்கு மங்களகரமான இலவச பொருட்கள் வழஙகப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆண்டாள் தரிசனம் செய்து மஞ்சள் பூசிக் கொண்டு வன திருப்பதி மூலஸ்தானம் செல்ல வேண்டும். துளசி தீர்த்தம் பிரசாதம் வழங்கப்படுகிறது. தங்கத்தால் ஆன கவசம் பக்தர்கள் தலையில் வைக்கப்படுகிறது. ஆசிர்வாதம் பெற்ற மக்கள் ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதிக்கு சென்று வந்த மன நிம்மதி கிடைக்கிறது. கடைசியாக ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கி செந்தூர திலகமிட்டுக் கொள்ள வேண்டும். செல்லும்வழி நெல்லை - திருச்செந்தூர் முக்கிய சாலையில் உள்ள குரும்பூர் வந்து அங்கிருந்து வன திருப்பதிக்கு மினி பஸ் மற்றும் அரசு பஸ்களில் செல்லும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு பஸ்கள் தினசரி குரூம்பூரிலிருந்து இத்திருத்தலத்துக்கு சிறப்பு பேருந்து இயக்க உள்ளது. சனிக்கிழமை தோறும் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடந்து வருகிறது. பக்தர்களின் தேவைகளுக்காக இங்கு கடைகள், ஓட்டல் உள்ளது. தங்கி இளைப்பாறுவதற்கு வசதியாகக் கட்டிடங்கள். கழிப்பிடக் கட்டிடங்கள் பஸ் நிழற்குடை ஆகியவை உள்ளன. மொத்ததில் இது ஒரு சுற்றுலா ஸ்தலமாகவும் திகழ்கிறது. நாமும் ஒருமுறை சென்று வரலாமே! |
.jpg)
No comments:
Post a Comment