முருங்கை கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது.
மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.
பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம்.
சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
முளைக்கீரை
முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் சரியாகும்.
வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும்.
மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும்.
இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
மிகப் பழங்காலத்திலிருந்தே கரிசலாங்கண்ணிக் கீரை இந்திய மருத்துவத்தில் இடம் பெற்றிருக்கிறது. கரிசலாங் கண்ணி கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதில் இணையற்றது. அத்துடன் கண் ஒளியைக் கூர்மையாக்குவதிலும் இந்தக்
கீரை நிகரற்றது.
இந்தக் கீரை உடலுக்கு உரம் ஊட்டவல்லது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றிற்கு இது நல்ல மருந்தாகும். அத்துடன் தோல் வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இந்தக் கீரையை ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையையும் தண்டையும் கொண்டு பல் துலக்கலாம். இவ்வாறு பல் துலக்குவதால் பல்லில் ஏற்படும் ஈறு வீக்கம், பல்வலி, எனாமல் தேய்தல் போன்ற குறைகள் நீங்கும்.
இந்தக் கீரையை உண்பதனாலும் இதனை மேலுக்குத் தேய்த்துக் கொள்வதாலும் உடலிலும் தலையிலுமுள்ள முடி நன்றாகக் கறுத்து வளரும். அவ்வாறு வளர்ந்த முடிகள் பளபளப்போடு மிளிரும் தன்மை உடையவை. அன்றியும் இக்கீரை உடலை பொன் நிறமாக்கும்.
இந்தக் கீரையின் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தச் சாற்றை குழந்தைகளுக்குத் தலையில் தேய்த்து குளிப்பூட்டுவதனால் செந்நிற முடி கருநிறமாக மாறுகிறது.
கண்ணொளி மங்கும்போது இந்த கீரை மருந்தாகப் பயன்படுகிறது.
உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி வலுவைத் தந்து, உயிர் அணுக்களைப் பெருக்கி தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது.
இக்கீரையை உணவோடு சேர்த்து உண்பதனால் உடம்பில் தங்கிய கெட்ட நீர்கள் வெளியேறுகின்றன. உடல் வளம் பெறுகிறது. மலச்சிக்கல் நீங்கப்பெற்று உடல் நலம் பெறுகிறது.
உடல் கனத்தையும், பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள், நாள்தோறும் பகல் உணவில் 2 முதல் 4 வாரம் தொடர்ந்து இக்கீரையை உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
பசலைக்கீரை :
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
சிறுகீரை :
உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை :
முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
வல்லாரைகீரை
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை 'சரஸ்வதி மூலிகை' என்றும் அழைக்கின்றனர்.
வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
அரைக்கீரை :
நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை :
வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை
குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை :
உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.
குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
புளிச்சக் கீரை :
உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது.
மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.
பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம்.
சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
முளைக்கீரை
முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் சரியாகும்.
வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும்.
மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும்.
இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரை
கீரை நிகரற்றது.
இந்தக் கீரை உடலுக்கு உரம் ஊட்டவல்லது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றிற்கு இது நல்ல மருந்தாகும். அத்துடன் தோல் வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இந்தக் கீரையை ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையையும் தண்டையும் கொண்டு பல் துலக்கலாம். இவ்வாறு பல் துலக்குவதால் பல்லில் ஏற்படும் ஈறு வீக்கம், பல்வலி, எனாமல் தேய்தல் போன்ற குறைகள் நீங்கும்.
இந்தக் கீரையை உண்பதனாலும் இதனை மேலுக்குத் தேய்த்துக் கொள்வதாலும் உடலிலும் தலையிலுமுள்ள முடி நன்றாகக் கறுத்து வளரும். அவ்வாறு வளர்ந்த முடிகள் பளபளப்போடு மிளிரும் தன்மை உடையவை. அன்றியும் இக்கீரை உடலை பொன் நிறமாக்கும்.
இந்தக் கீரையின் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தச் சாற்றை குழந்தைகளுக்குத் தலையில் தேய்த்து குளிப்பூட்டுவதனால் செந்நிற முடி கருநிறமாக மாறுகிறது.
கண்ணொளி மங்கும்போது இந்த கீரை மருந்தாகப் பயன்படுகிறது.
உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி வலுவைத் தந்து, உயிர் அணுக்களைப் பெருக்கி தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது.
இக்கீரையை உணவோடு சேர்த்து உண்பதனால் உடம்பில் தங்கிய கெட்ட நீர்கள் வெளியேறுகின்றன. உடல் வளம் பெறுகிறது. மலச்சிக்கல் நீங்கப்பெற்று உடல் நலம் பெறுகிறது.
உடல் கனத்தையும், பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள், நாள்தோறும் பகல் உணவில் 2 முதல் 4 வாரம் தொடர்ந்து இக்கீரையை உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
சிறுகீரை :
உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை :
முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
வல்லாரைகீரை
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை 'சரஸ்வதி மூலிகை' என்றும் அழைக்கின்றனர்.
வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை :
வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை
குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை :
உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.
குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
புளிச்சக் கீரை :
உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
No comments:
Post a Comment