Tuesday, 24 September 2013

வீட்டிலிருந்தபடியே வயிற்றுக் கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்



வீட்டிலிருந்தபடியே வயிற்றுக் கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்

இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் பிரச்சனையாக உருவெடுத்து நிற்பது அதிக எடைப் பிரச்சனை. பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தால் அதிகரித்திருக்கும் இந்தப் பிரச்சனையால் ஏற்படும் தொப்பை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளும் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்து வருகிறது. தொப்பையைக் குறைக்கும் நடவடிக்கையில் எதையெதை சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாய் இருப்பது தான் முதல் படி. துரித உணவுகள் சாப்பிடுவதில் யாருக்கு தான் ஆசை இல்லை? ஆனால் அவற்றால் உடலின் மையப்பகுதியான வயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைப்பதென்பது சுலபமான காரியமில்லை. உங்களுக்கு எதில் விருப்பம் அதிகம்? துரித உணவுகளின் மீதா அல்லது சரியான அளவுள்ள வயிற்றின் மீதா என முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். 
உடல் எடையைக் குறைக்க மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதேபோல் சீரான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட உடல் எடையைக் குறைக்க குறுக்கு வழிகள் கிடையாது என்பதையும் உணருதல் அவசியம். 
இப்போது அத்தகைய உடல் எடையை குறைக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் மற்றும் எந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்: 

புளிப்புச் சுவையுள்ள ஆரஞ்சு பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி ஆகிய பழங்கள் சிறந்த கொழுப்பு உருக்கிகளாக செயல்படுகின்றன. வைட்டமின் சி அதிகமுள்ள இப்பழங்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து வேகமாக கொழுப்பை உருக்குகின்றன. ஆகவே உடல் எடை குறைப்பை துவங்கியவுடன் ஆரஞ்சு பழங்களுடன், ஆப்பிள், தர்பூசணி, திராட்சை போன்ற கொழுப்புருக்கிப் பழங்களை உட்கொள்ளுதல் நல்லது. 



வண்ண காய்கறிகள் தாதுக்கள் அதிகமுள்ள முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, கீரை, பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளில் கொழுப்புச் சத்து அறவே கிடையாது. இவற்றை சமைப்பதற்குப் பதிலாக வேக வைத்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்





பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் அமினோ அமிலம் அதிகம்உள்ளது. முளைப் பயிர்களிலும் அமினோ அமிலம் அதிகமுள்ளதால், அவற்றை உட்கொள்வது நல்லது



ஓட்ஸ் ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைத்து, பலமணி நேரத்திற்கு சக்தியுடன் வைத்திருக்கிறது







நட்ஸ் ஒரு கையளவு பாதாம் பருப்பு சாப்பிட்டால், பல மணிநேரம் பசியற்ற உணர்வை உருவாக்குகிறது






முட்டைகள் புரதம் அதிகமுள்ள முட்டையில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது






மீன் எண்ணை சால்மன், கானாங்கெழுத்தி, டூனா மீன்களில் புரதம் அதிகமாக இருப்பதால், வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. ஒமேகா-3 அமிலம் வயிற்றுக் கொழுப்பை கரைக்கிறது.






நீர் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும் நீரை அதிகமாக அருந்துதல், உடல் எடைக் குறைப்பிற்கு நல்லது






உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள்:

பயிற்சி: 1 
1. கால் சுழற்சியானது, இறுகிய கொழுப்பை உருக்கி வயிறு, தொடை, இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. 
2. அதற்கு தரையில் நேராகப் படுத்துக் கொண்டு, கைகளை பின்னால் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் 45 டிகிரி கோணத்தில் தூக்கி, முதலில் வலது பக்கமாகவும் பிறகு இடது பக்கமாகவும் 10 முறை சுழற்றுங்கள். 
3. ஆரம்பத்தில் 2 முறை துவங்கி பிறகு எண்ணிக்கையை அதிகரியுங்கள். புதிதாக துவங்குகிறவர்கள் முட்டிகளை மடக்கிவிட்டுச் செய்யலாம். 5-6 செட்கள் வரை ஓய்வின்றி செய்யலாம். 
4. இப்படிச் செய்யும் போது வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் அழுத்தத்தை உணரலாம். 

பயிற்சி: 2 
1. படுத்துக் கொண்டு காலை 45 டிகிரி கோணத்தில் உயர்த்தி மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இதே போல் 5-6 செட்கள் வரை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் ஒரு காலில் மட்டும் துவங்கி 10 முறை செய்துவிட்டு, பிறகு சிறிது நாட்கள் கழித்து இரண்டு கால்களையும் செய்யலாம். 
2. ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் போகப்போக பழகிவிடும்.  



பயிற்சி: 3 
தண்டால் எடுப்பது வயிற்றுக் கொழுப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் இது பெண்களுக்கான சிறந்த பயிற்சியும் கூட.
 1. கீழே நேராகப் படுத்துக் கொண்டு முட்டிகளை மடக்கிக் கொண்டு கால்களை 90 டிகிரியில் உயர்த்த வேண்டும். (படத்தைப் பார்க்கவும்) 
2. இப்போது கைகளை உயர்த்தி தலைக்குப் பின்னாலோ அல்லது நெஞ்சுப்பகுதிக்கு குறுக்கிலோ வைத்துக் கொள்ள வேண்டும்.
 3. மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, மேல் வயிற்றுப் பகுதியை தரையில் இருந்து லேசாக மேலெழுப்பவேண்டும்.
 4. இதையே ஒரு 10 முறை செய்துவிட்டு பிறகு படிப்படியாக 2-3 செட்கள் செய்யலாம். வயிற்றை மேலெழுப்பும் போது 30-40 டிகிரி கோணத்தில் அமரும் போது வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை உணரலாம்.  

பயிற்சி: 4 
1. தரையில் படுத்துக் கொண்டு கைகளை பக்கவாட்டிலோ அல்லது தலைக்குப் பின்னோ வைத்துக் கொள்ளவும்.
 2. இப்போது முட்டிகளை மடக்கி, கால்களை தரையில் இருந்து தூக்கிக் கொள்ளவும். 
3. இப்போது வலது முட்டியை நெஞ்சுப்பகுதிக்கு அருகில் கொணர்ந்து, இடது காலை வெளியே நீட்டவும். 
4. இப்போது வலது காலை வெளியே நீட்டி, இடது காலை நெஞ்சுப்பகுதிக்கு அருகில் கொணரவும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், வயிற்றை தட்டையான கவர்ச்சியான தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றலாம்.  


மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்


மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்

தற்போது புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் மார்பக புற்றுநோயால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 வயதுள்ள 229 பெண்களில் ஒருவருக்கும், 40 வயதுள்ள 68 பெண்களில் ஒருவருக்கும், 50 வயதில் 37 இல் ஒருவருக்கும் நிச்சயம் மார்பக புற்றுநோயானது இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால், இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். 

ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.

 சரி, இப்போது அத்தகைய மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!! 

உடற்பயிற்சி:
தினமும் 30-45 நிமிடம் உடற்பயிற்சியை செய்தால், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது. குறிப்பாக தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது

எடை:
உடலுக்கு தகுந்த எடை இல்லாமல் அதிகமாக இருந்தால், அதுவும் 18 வயதிலிருந்து சரியாக இல்லாவிட்டால், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால், அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, புற்றுநோய் உண்டாகும். 

கொழுப்பு உணவுகள்:
கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் மற்றும் பல எண்ணெய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே உணவில் கொழுப்பு இல்லாத எண்ணெய்களான ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை சேர்ப்பது மிகவும் நல்ல

காய்கறி மற்றும் பழங்கள்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது

சோயா பொருட்கள்:
சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்

தாய்ப்பால் கொடுப்பது:
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்

புகைப்பிடிப்பது:
புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில், மார்பக புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை பெண்கள் தவிர்ப்பது நல்லது









Important Health Tips







FRUITS AND BENEFITS
















Friday, 13 September 2013

Top 10 Benefits of Carrot Juice


Top 10 Benefits of Carrot Juice



  1. Carrot juice contains less calories and is very beneficial for weight loss.
  2. The functioning and health of liver and digestive tract improves by the intake of carrot juice.
  3. Carrot juice contains Vitamin E which helps in preventing cancer.
  4. Aches and pains associated with aging lessen with the intake of carrot juice.
  5. Vitamin A present in carrot juice improves eye-sight and helps in bone disorders, osteoporosis etc.
  6. It contains potassium which helps against cholesterol.
  7. Carrot juice is extremely beneficial for the liver as it reduces fat and bile in the liver.
  8. The juice revitalises and tones the skin.
  9. Carrot juice is very rich in beta-carotene which is an antioxidant and it prevents cell degeneration. The aging process is also slowed down.
  10. Carrots contain beta-carotene which is converted into "Vitamin A" by our body. This natural vitamin A is very good for our body.


Here are 10 Foods That Burn Fat


Hello there!!...

Are you planning to get rid of some extra fats from your body?...

Here are 10 Foods That Burn Fat


1. Oats : Its not only tastes great but also reduces your hunger. Oats contains fiber which helps and stabilizes the levels of cholesterol.

2. Eggs : Eggs are the rich sources of proteins and low in calories. Eggs helps us to build the muscles and develops the good cholesterol.

3. Apples : Apples are enriched with powerful antioxidants and other supplements. Most importantly it contains Pectin which helps to reduce the fat cells in the body.

4. Green Chillies : Green chillies contains Capsaicin which helps to develop the body growth cells and burns the calories in quick time.

5. Garlic : Garlic contains Allicin which has anti-bacterial properties helps us to reduce the fat and removes the bad cholesterol.

6. Honey : Honey is the best one to burn fat. Add honey in warm water and take it daily in the early morning.

7. Green Tea : Green Tea is the most effective one which helps you to lose weight. It contains Antioxidants which helps and stabilizes our body weight.Take daily 2 cups of tea for a better results.

8. Wheat Grass : It boosts our metabolism and helps to reduce the fat.

9. Tomatoes : Tomatoes helps us to burn the fat in quick time. It also helps us to stay away from cancer. So Take tomatoes in your diet regularly.

10. Dark Chocolate : Dark chocolate contains Flavonoids, anti-inflammatory properties which helps to reduce the cholesterol levels in the blood. It boost the growth of serotonin in the blood and also burns the fat.

இரத்த தானம் (1,000 முறைக்கும் அதிகமான தடவை இரத்த தானம் செய்து சாதனை)


இரத்த தானம்

ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற 13 வயது சிறுவன் ஒரு பாரிய அறுவை சிகிச்சைக்கு உள்ளானான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான்.

அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான். அப்போது தான் ரீசஸ் (Rhesus Disease) நோயை குணப்படுத்துக் கூடிய மிக அரிதான எதிராக்கி (Antigen) ஐ அவனது இரத்தம் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ் ஹாரிசன் 1,000  முறைக்கும் அதிகமான தடவை இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளார். அதிலிருந்து 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ளார்.

அந்த மதிப்பிற்குரிய மாமனிதரின் Photo தான் இது.


நாம் உலகில் பிறந்து பல வருடங்களைக் வீணே கழித்து விட்டோம். இந்த மனித இனத்துக்கு செய்த பங்களிப்பு தான் என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம், மறந்து வாழ்கிறோம்.

வாழ்கையின் அர்த்தத்தை உணரந்து நல்லவைகளை நண்பர்களுடனும் பகிந்து கொள்வோம்..

கல்லணை


கல்லணை ( Tiruchirapalli (Trichy), India )

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.

A T M mechine



நியாய விலை கடை சரக்கிருப்பு விவரங்கள் அறிந்துக் கொள்ள - S.M.S.


நியாய விலை கடை இனி அநியாய விலை கடையாக செயல்பட முடியாது !!


"ஸ்டாக் இல்லை" ....!ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)

என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, 12 September 2013

இயற்கை ஷாம்பு, குளியல் பொடி, ஆயுர்வேத அழகு குறிப்புகள்


குளியல் பொடி

இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க

தேவையான பொருட்கள்...

சோம்பு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
அகில் கட்டை - 100 கிராம்
சந்தனத் தூள் - 150 கிராம்
கார்போக அரிசி - 100 கிராம்
தும்மராஷ்டம் - 100 கிராம்
கோரைக்கிழங்கு - 100 கிராம்
கோஷ்டம் - 100 கிராம்
ஏலரிசி - 100 கிராம்
பாசிப்பயிறு - 250 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 200 கிராம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி 20 ஊற வைத்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.

இயற்கை ஷாம்பு

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது.

மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.

1) தண்ணீர்: தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது.

கண்டிஷனர் 

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராக பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

சரும சுருக்கத்தை நீக்க எளிய வழிகள்
பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?

சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

•  சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க புதினாவை பயன்படுத்தால். மேலும் புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமம் பொலிவாக இருக்க உதவும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.

• சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில்,  தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும். தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

• பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.  அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.

• மஞ்சள் தூள் உடன் சிறிதளவு பாலை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

• மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.

• சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

• பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.

ஆயுர்வேத அழகு குறிப்புகள்

  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

• ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

• முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

• நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

• கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

• வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

• இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

• கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

• இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

• முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

Tuesday, 3 September 2013

கீரைகளும் பயன்களும்

முருங்கை கீரை

         இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது.
         மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.
         பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம்.
          சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
            கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

முளைக்கீரை

         முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும்.            அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் சரியாகும்.
          வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும்.
            மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.
         சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும்.
          இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது.            உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரை

மிகப் பழங்காலத்திலிருந்தே கரிசலாங்கண்ணிக் கீரை இந்திய மருத்துவத்தில் இடம் பெற்றிருக்கிறது. கரிசலாங் கண்ணி கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதில் இணையற்றது. அத்துடன் கண் ஒளியைக் கூர்மையாக்குவதிலும் இந்தக்
கீரை நிகரற்றது.
        இந்தக் கீரை உடலுக்கு உரம் ஊட்டவல்லது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றிற்கு இது நல்ல மருந்தாகும். அத்துடன் தோல் வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இந்தக் கீரையை ஒத்தடம் கொடுக்கலாம்.
        இலையையும் தண்டையும் கொண்டு பல் துலக்கலாம். இவ்வாறு பல் துலக்குவதால் பல்லில் ஏற்படும் ஈறு வீக்கம், பல்வலி, எனாமல் தேய்தல் போன்ற குறைகள் நீங்கும்.
        இந்தக் கீரையை உண்பதனாலும் இதனை மேலுக்குத் தேய்த்துக் கொள்வதாலும் உடலிலும் தலையிலுமுள்ள முடி நன்றாகக் கறுத்து வளரும். அவ்வாறு வளர்ந்த முடிகள் பளபளப்போடு மிளிரும் தன்மை உடையவை. அன்றியும் இக்கீரை உடலை பொன் நிறமாக்கும்.
        இந்தக் கீரையின் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தச் சாற்றை குழந்தைகளுக்குத் தலையில் தேய்த்து குளிப்பூட்டுவதனால் செந்நிற முடி கருநிறமாக மாறுகிறது.
கண்ணொளி மங்கும்போது இந்த கீரை மருந்தாகப் பயன்படுகிறது.
          உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி வலுவைத் தந்து, உயிர் அணுக்களைப் பெருக்கி தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது.
இக்கீரையை உணவோடு சேர்த்து உண்பதனால் உடம்பில் தங்கிய கெட்ட நீர்கள் வெளியேறுகின்றன. உடல் வளம் பெறுகிறது. மலச்சிக்கல் நீங்கப்பெற்று உடல் நலம் பெறுகிறது.
            உடல் கனத்தையும், பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள், நாள்தோறும் பகல் உணவில் 2 முதல் 4 வாரம் தொடர்ந்து இக்கீரையை உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.

பசலைக்கீரை :

குளிர்ச்சி தருவதில் சிறந்தது,  நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.





சிறுகீரை :

உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.





வெந்தயக்கீரை :



முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.




வல்லாரைகீரை

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

       வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

           வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

           வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

            குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
           ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை 'சரஸ்வதி மூலிகை' என்றும் அழைக்கின்றனர்.
           வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
           வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

அரைக்கீரை :



நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.


அகத்திக் கீரை :

வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

மணத்தக்காளி கீரை

குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.




பாலக்கீரை :

உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.
குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.





புளிச்சக் கீரை :
உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.