Monday, 18 November 2013

பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்



எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.

அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.

பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.

நன்றி : tamil.webdunia.com

பப்பாளி பழம் - நன்மைகள்




மற்ற பழங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. 

இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும்.



அடங்கியுள்ள சத்துக்கள்

  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.
  • விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
  • கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
  • பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.


மருத்துவப் பண்புகள்

  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.    உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

நன்றி : தமிழ் விக்கிமீடியா (பப்பாளி)




கேரட் கீர் ,அன்னாசிப் பழ கீர் ......


கேரட் கீர் : 
தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - சிறிது, குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும். இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்.
அன்னாசிப் பழ கீர் 
தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், பாதாம் பருப்பு - 50 கிராம், பால் - 1/2 லிட்டர், பேரீச்சம்பழம் - 100 கிராம், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா 25 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் பொடி - லு டீஸ்பூன்.
செய்முறை : அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.பேரீச்சம்பழத்தையும் கொட்டை நீக்கி நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, சாறை வடித்தெடுக்கவும். இதில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில்வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும். 
கோதுமை கீர் 
தேவையான பொருட்கள் : உடைத்த கோதுமை - 50 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 21/2 கப், தண்ணீர் - ஒரு கப், க்ரீம் - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 25 கிராம், வெள்ளித்தாள் -2, நெய் - 3 டேபிள் ஸ்பூன், உலர் திராட்சை, பிஸ்தா பருப்பு - தலா 10 கிராம், பன்னீர் - சில துளிகள்.
செய்முறை : நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால், பன்னீர், க்ரீம், பொரித்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதன் மீது வெள்ளித் தாளை விரித்து அலங்கரித்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறவும். 
பழக்கலவை சேமியா கீர் 
தேவையான பொருட்கள் : பால் - 6 கப், பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய உடைத்த சேமியா, ஒரு கப் க்ரீம் - ஒரு கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை : சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். அத்துடன் வறுத்த சேமியா சேர்த்து, வேக விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி க்ரீம், பழக்கலவை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஃப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்துப் பரிமாறவும். 
பாதாம் கீர்
தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 25 கிராம், சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கற்பூரம், கேசரிக்கலர் - சிறிதளவு.
செய்முறை : முந்திரிப் பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு மூன்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அதனை 3 கப் நீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை மாறியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றவும்.பிறகு மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாக வந்ததும் கீழே இறக்கவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம். 
உளுத்தம் கீர் 
தேவையான பொருட்கள் : பால் - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 100 கிராம், பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், துருவிய வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்ப் பொடி, கேசரிக் கலர், நெய், சுக்குப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.
செய்முறை : உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும்.கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்

Monday, 11 November 2013

இனிப்பு வகைகள்


பால் அல்வா

தேவையானவை

காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.

பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும். 

பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.


தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்:
துருவிய உலர்ந்த தேங்காய் - 3 கப் சர்க்கரை - 2 கப் பால் - 1 கப்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிர வைத்தால், சூப்பரான தேங்காய் லட்டு ரெடி.

சாக்லெட் பர்பி
தேவையானவை 
மைதா - 3/4 கப் 
கோகோ பவுடர் - 1/2 கப் (அ) சாக்லெட் பார் (பெரியது) - 1 
சர்க்கரை - 11/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன், 

செய்முறை 
அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் மைதாவை போட்டு நன்றாக வறுக்கவும்.

இந்த கலவையை தனியாக வைத்து மற்றொரு பாத்திரத்தில் சக்கரை பாகு செய்துக்கொள்ளவும்.

இந்த சக்கரை பாகில் கோகோ பவுடர் (அ) துருவிய சாக்லெட், வறுத்த மைதா ஆகிவற்றை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டின் மீது கொட்டி, சமமாக பரப்பி சிறிது நேரம் கழித்து துண்டுகளாக வெட்டினால் சுவையான சாக்லெட் பர்பி தயார். 

பன்னீர் கோகனட் லட்டு

பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புது புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை 
பன்னீர் - 250 கிராம், 
பொடித்த சர்க்கரை - 1/4 கப் 
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள் 
தேங்காய் - ஒரு மூடி 
சர்க்கரை - 1/2 கப் 
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை
பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும்.

அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து, அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.


பாசிப்பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்: 
பால் - 2 1/4 கப், பாசிப்பருப்பு - 1/3 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப்,
 அரிசி மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், முந்திரி - 6,  நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்பு அதே வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பிறகு துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 
  • அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறி விட்டு இறக்கி, நன்கு குளிர விட வேண்டும். 
  • பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி
திணை சக்கரை பொங்கல்

தேவையானவை 

திணை - 3/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன் 
நெய் - தேவைகேற்ப 
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு 

செய்முறை 

திணை மற்றும் பாசி பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும் 

குக்கரில் வறுத்த திணை, பாசிபருப்பை 3 கப் தண்ணீரில் 4 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும் 

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதனோடு வெல்ல பாகு,ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கவும் 

ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து திணை சக்கரை பொங்கலுடன் சேருங்கள்.





தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!


தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!

பீட்டா கரோடின் என்ற சத்தின் மூல ஊற்று காரட் என்றால் மிகையாகாது வைட்டமின் ஏ-யின் முன்னோடி பீட்டா கரோடின் இது காரட்டில் அதிகம் உள்ளது.

உணவு சீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் காரட்டில் உள்ளது. மாலைக் கண் நோயை தடுக்கவல்லது காரட்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த சத்துக்களெல்லாம் அதில் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமத்தில் லேசான மஞ்சள் தன்மை ஏற்படும். பச்சை காரட்டில் உள்ள பீட்டா கரோடினை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதினால் இருதய நோய்களைத் தடுக்க முடியாது. பச்சை காரட்தான் நல்லது.

பீட்டா கரோடின் நம் உடலில் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. அதிக பளபளப்பு இருக்குமேயானால் பீட்டா கரோடின் சத்தும் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.

சமைக்கப்பட்ட ஒரு கப் காரட்டில் 70 கலோரிகள் உள்ளன. 4கிராம் நார்சத்தும், சுமார் 18மிலி கிராம் பீட்டா கரோடினும் உள்ளது. வைட்டமின் ஏ உணவில் எவ்வளவு இருக்கவேண்டும் என்ற அளவிற்கு இது மிகத்துல்லியமாக பொருந்தக்கூடியது. ஆரோக்கியமான தலை முடி, சருமம், கண்கள், எலும்புகள், சளிச்சவ்வு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும் கிருமிகளிலிருந்தும் காக்கிறது வைட்டமின் ஏ.

தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் 3வாரங்கள் அளவில் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

நமது பொதுப்புத்தி புரிதலுக்கேற்ப காரட் சாப்பிட்டால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஏற்படாது என்று தவறாக நினைத்து விடக்கூடாது. ஆனால் காரட்டில் உள்ள சத்து இல்லாததால் மாலைக் கண் நோய் ஏற்படலாம்!

சில தினங்களுக்கு ஒரு முறையாவது காரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம். அதாவது மாலைக் கண் நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் வருகிறது என்ற நிலையிருக்கும்போது மட்டும் காரட் பயனளிக்கும்.

காரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது. அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது.

காரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.

பீட்டா கரோடின் மட்டுமல்லாது ஆல்பா கரோட்டின், பயோ ஃபிளாவனாய்ட்ஸ் ஆகியசத்துகளும் உள்ளன. காரட்டில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. இன்னும் கூறப்போனால் மாத்திரை வடிவில் பீட்டா கரோடினை எடுத்துக் கொள்வது புகைப்பிடிப்பவர்களுக்கு தீங்கு கூட இழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Monday, 28 October 2013

வாழைப்பழத் தோல் அளிக்கும் நன்மைகள்

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் வளமையாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சரி, இப்போது இயற்கையின் இந்த அரிய அன்பளிப்பு உங்களுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாமா..




பளபளக்கும் பற்கள்:  வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும் பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட வைக்கும்.

மரு:  மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.

பருக்கள்:  வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்

சுருக்கம்:   வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்

சிரங்கு:   சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்

பூச்சிக் கடிகளுக்கு:   மருந்து கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

ஷூ, லெதர் மற்றும் சில்வர் பாலிஷ்:  ஷூ, லெதர் மற்றும் சில்வர்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால், அவைகளை பளபளக்கச் செய்யும்

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு:  வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்

1546 கண்களுக்கு ஒளி தந்த விழிச் சேவகர்

கண் தான படிவத்தில் கையொப்பமிட்டுசெல்வராஜிடம்
கொடுக்கும் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன்

கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றுத் தந்து 1546 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறார்.

ரத்த தானம், கண் தானம், உடல் தானம் பற்றி மக்களிடம் சமீபகாலமாகத்தான் விழிப்புணர்வு வந்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு ரத்ததானம் செய்வதே பெரிய விஷயம். அப்படி இருக்கையில், அப்போதே கண் தானம் எப்படி சாத்தியமானது என்று கேட்டால் அடக்கமாக சிரிக்கிறார் செல்வராஜ்.

“1993-ல் சென்னை தொலைக்காட்சி யில், பார்வை இல்லாதவங்களுக்கான குறும்படம் போட்டாங்க. பார்வை இல்லாதவங்களோட கஷ்டத்தையும் அவங்களோட வலிகளையும் அந்தப் படம்தான் எனக்கு புரிய வைச்சது. அந்த ஜீவன்களுக்காக நம்மால முடிஞ்ச எதையாச்சும் செய்யணும்னு முடிவு பண்ணினேன். குறும்படம் பார்த்த மூணாவது நாள், திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரிக்குப் போனேன். கண் தானம் குடுப்பது, பெறுவது சம்பந்தமான சந்தேகங்களை தெளிவு படுத்திக்கிட்டேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, என்னை கண் தான ஊக்குவிப்பாளரா சேர்த்துக்கிட்டாங்க. கண் தானம் சம்பந்தமா சின்னச் சின்ன வாசகங்களை துண்டுப் பிரசுரமா எழுதி மக்களுக்குக் கொடுத்தேன்.

1994 டிசம்பர்ல, பெல் ஊழியர் பாஸ்டின் ஜோசப் நோய்வாய்ப்பட்டு இறந்துட்டார். தகவல் தெரிஞ்சு, அவரோட குடும்பத்தார்கிட்ட பேசுனேன். ஆனாலும், கண்களை கொடுக்க அவங்க ஒத்துக்கல. “எவன் சாவான்னு அலையுறியா?”னு கேட்டு கேவலமா பேசுனாங்க. ஒரு உயிரைப் பறிகொடுத்துட்டு நிக்கிறவங்களோட மனநிலை அந்த நேரத்துல அப்படித்தான் இருக்கும். அதனால, அவங்க பேச்சை நான் பெரிசா எடுத்துக்கல. யதார்த்தத்தை எடுத்துச் சொன்னேன். பாஸ்டின் ஜோசப் செத்ததுக்கு அப்புறமும் இந்த உலகத்தைப் பார்க்கப் போறார்னு சொல்லி புரியவச்சேன். வெற்றிகரமா முதல் ஜோடி கண்களை தானமா பெற்றுக் குடுத்தேன். அன்னைக்கி நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல’’ பசுமையான பழைய நிகழ்வுகளில் மூழ்கிப் போன செல்வராஜ் தொடர்ந்து பேசினார்.

“1998-க்கு அப்புறம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாச்சு. கண் தானம் குடுத்த குடும்பங்களுக்கு பாராட்டு விழா, கிராமங்கள்ல கண் பரிசோதனை முகாம்னு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி னேன். கண் தானம் செய்ய வயது தடையில்லை. பிறந்து அஞ்சு மணி நேரத்தில் இறந்த குழந்தையின் கண்கள் தொடங்கி 104 வயது மூதாட்டியின் கண்கள் வரை இதுவரைக்கும் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றிருக்கேன். இது எனக்கே வியப்பாத்தான் இருக்கு’’ விழிகளை விரிக்கிறார் இந்த விழிச் சேவகர்.

கண் தானத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டில் ‘அனைவருக்கும் பார்வை - அழைக்கிறது பெல்’ என்ற இயக்கத்தை தொடங்கிய பெல் நிறுவனம், இயக்கத்தின் துணைத் தூதராக செல்வராஜை அறிவித்தது. அப்போது திருச்சி கலெக்டர் ஜெய முரளிதரன் தனது இரண்டு கண்களையும் தானம் கொடுப்பதாக செல்வராஜ் நீட்டிய உறுதிமொழி படிவத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

கண் தான சேவைக்காக பல்வேறு விருதுகளை செல்வராஜ் பெற்றிருக் கிறார். இது மட்டுமின்றி, பார்வையற்ற 70 ஜோடிகளுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்துவைத்து, அதற்குப் பிறகு வளைகாப்பும் நடத்தி வாழவைத்துக் கொண்டிருக்கிறார் இந்த நற்பணி நாயகன்!

கண் தானம் பற்றி பொதுவான தகவல்கள்


















கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.

யார் கண் தானம் செய்யலாம்?
  • ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
  • கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
  • இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
  • ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
  • உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

யார் கண் தானம் செய்யக் கூடாது?
  • கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.

பயன்கள்
  • கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.

சில பொதுவான தகவல்கள்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
  • ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
  • கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
  • இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
  • திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
  • இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
  • கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
  • கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது
  • கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை
  • மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
  • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
  • கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
  • இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
  • குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
  • தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

சில இந்தியப் புள்ளி விவரங்கள்
  • இந்தியாவில் பார்வையற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சம்.
  • கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
  • ஒரு ஆண்டுக்குத் தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
  • இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்தான். பிற கருவிழிகள் வேறு சில ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம்

ரோட்டரி அரவிந்த் அகில உலகக் கண் வங்கி வெளியிட்டுள்ள சிறு கையேட்டுப் பிரதி.

108க்கு போன் செய்தும் கண் தானம் செய்யலாம்- 
  • சென்னை: கண் தானம் செய்ய விரும்பினால் இறந்தவர்களின் உறவினர்கள் 108 இலவச ஆம்புலன்சுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 
  • 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 5ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. ஜிவிகே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.என்.ஸ்ரீதர் வரவேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார திட்ட இயக்குனர் பங்கஜ் குமார், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 
  • அமைச்சர் கே.சி.வீரமணி விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை 20 ஆம்புலன்சுடன் தொடங்கப்பட்டது.
  •  தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 629 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. 108 இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 5 ஆண்டுகளில், 23,46,048 பேர் பயன் அடைந்துள்ளனர். 
  • கண் தானம் குறித்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களும், தங்கள் உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களது கண்களை தானம் செய்ய விரும்பினால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யலாம். அவர்கள், கண்களை தானம் பெற்று செல்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க உதவி செய்வார்கள் என்றார் அமைச்சர். 



Saturday, 26 October 2013

வாக்கிங் போகலாம் வாங்க




  • நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சிதான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது ‘வாக்கிங் போங்க’ என்பதாக உள்ளது.
  • ‘வாக்’ பண்ணும்போது கவனிக்க வேண்டியவை குறித்து, சேலம் பரத் பிசியோகேர் மையத்தின் நிர்வாக இயக்குநரும், பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட்டுமான எம்.செந்தில்குமாரிடம் கேட்டோம்.
  • ”எப்படி நடக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நடையின் பலனும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது. பொதுவாக நாற்பது வயதானாலே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வயதில்தான், பலரும் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நடைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாக்கிங் போவதன் மூலம் நல்ல ஆரோக்கியமாய் இருப்பதுடன் இளமையுடனும் இருக்க முடியும்” என்றவர் நடைப் பயிற்சிக்கான வழிமுறைகளையும் விளக்கினார்.
  • ”ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ. நடக்க ஆரம்பித்து, நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92-102 பாத அடியாகவும், பெண்களுக்கு 91-115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால்தான் ஆண்களுக்கு இணையாக கடக்க முடியும். நடைப்பயிற்சியின்போது, வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.
  • சாப்பிட்ட உடனே நடக்காமல் இதனால் தசை மற்றும் மூட்டுகள் நடைப்பயிற்சிக்கு தயாராகிவிடும்.
  • மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி, கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.
  • சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில்  நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று,  பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், ஷூ (அ) செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்.
  • சுமார் 350 மைல்களுக்கு மேல் நடக்கும்பட்சத்தில், ஷூவை மாற்ற வேண்டும். ஷூ ஒரு பக்கம் தேய்ந்து, தொடர்ந்து நடக்கும்போது, மொத்த உடல் எடையும் ஒரு பக்கமாக சாயும். இதனால், கால் முட்டி, பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் நடப்பதை தவிர்ப்பதன்மூலம் இடுப்பு, முதுகு வலி வராமல் தடுக்கலாம்.
  • சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், எப்போதும் கையில் சாக்லெட்டும், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாட்டிலில் தண்ணீரும் எடுத்துச் செல்வது அவசியம். பனி, குளிர் காலத்தில் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அணிந்து வாக்கிங் செல்ல வேண்டும். வயதில் மூத்தவர்கள் மாடிப்படி ஏறி, இறங்குவதைத் தவிர்த்து, சமதளத்தில் நடப்பது நல்லது” என்று நடைப் பயிற்சிக்கான வழிமுறைகளையும்  விளக்கினார் 
  • ”ரத்த ஓட்டம் சீராகும். உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறும். நுரையீரல் சீராக செயல்பட்டு சுவாச நோய்கள் வராமல் தடுக்கப்படும். கொழுப்பின் அளவு குறையும். புத்திக் கூர்மை, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி கூடும்” என்றும் கூறினார் .


நன்றி: அமீன்

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்!


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:

  •  பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.
  • இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
  • அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:

  • வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. 
  • ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
  • நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. 
  • வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. 
  • இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்:

  • நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. 
  • குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு :

  • வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. 
  • இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. 
  • காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. 
  • ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :

  • பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :

  • நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 
  • தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. 
  • இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறால்

மீன் மற்றும் நண்டு :

  • அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும். 

தேநீர் : 

  • தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. 
  • சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :

  • சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :

  • குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. 
  • உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.
  • இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. 


மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்..

நன்றி: B.G.துர்கா தேவி – தமிழ் கருத்துக் களம்

பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டியவை

                  உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:

கீரை வகைகள்:
உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.

முழு தானியங்கள்:
முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.

கொட்டை பருப்புகள்:
பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.

இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.

தயிர்:
குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

நாவற்பழம்:
பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான். மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது.இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.

நன்றி: வெப்துனியா.காம்

காய்கறிகளைப் பார்த்து வாங்குங்க

தக்காளி: நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த பெங்களூரு தக்காளி கெடாது என்பதால் நன்கு பழுத்த பழமாகவே பார்த்து வாங்கலாம்.


முருங்கைக்காய்: முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் வாங்கும்போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். இதில்தான் காம்புகளும் தடிமனாக இருக்காது.

மாங்காய்: மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பாருங்கள். தேங்காயில் வருவது போலப் பெரிதாகச் சத்தம் வர வேண்டும். அதில்தான் கொட்டை சிறிதாக இருக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு: சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கும்போது ஆங்காங்கே அடிபட்டு கறுப்பாகி இருப்பதை தவிர்த்து வாங்குங்கள். இது கசக்கும். உருண்டையான கிழங்குகள்தான் அதிகம் இனிக்கும்.

பூண்டு: பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே தெரிவதையே வாங்க வேண்டும்.

அவரை: நாட்டு அவரையைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக இருக்காது.

உருளைக் கிழங்கு: இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக் கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர வேண்டும்.

சேப்பங்கிழங்கு: முளைவிட்டதுபோல் ஒரு முனை நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில் சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாக இருப்பனவற்றைப் பார்த்து வாங்குங்கள்.

கருணைக் கிழங்கு: கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன் உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

பச்சை மிளகாய்: நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டான பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும். இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

பீர்க்கங்காய்: பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

கத்தரிக்காய்: பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல் சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின் தோல் ரஃப்பாக இருக்கும்.

புடலங்காய்: புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான் வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதிகுறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும் இருக்கும்.

பரங்கிக்காய்: பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து வாங்குவதுதான் நல்லது.

கோவைக்காய்: பொரியல் செய்யப் பயன்படுத்தும் கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.


வாழைத்தண்டு: பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும் வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார் அதிகமாக இருக்கும் என்பதால் மேல் பகுதியாகப் பார்த்து வாங்குங்கள். உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.

பீன்ஸ்: பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும்.    

புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர் விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல் சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.

முள்ளங்கி: முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும். அதுவே இளசு.

வெள்ளரி: வெள்ளரிக்காயின் மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான் விதைகள் குறைவாக இருக்கும்.

பாகற்காய்: பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை உருண்டையான ஷேப் காய்களை வாங்குவதைவிட தட்டையான நீண்ட காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.

சௌசௌ: சௌசௌ வாங்கும்போது அதன் வாய் போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள் பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால் காய் முற்றலாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வாழைப்பூ: வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது என்று அர்த்தம்.

இஞ்சி: லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து வருவது மாதிரியே இருக்க வேண்டும். அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும். இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்.

நன்றி: தினமணி

எப்போதும் இளமையாக இருக்க


எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே…

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.

6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.

10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.

12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.

13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.

15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.

16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.

19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.

20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

நன்றி: தகவல் களஞ்சியம்

Thursday, 24 October 2013

தேவையற்ற கொழுப்பை குறைக்க..!



பூண்டு:
                ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.

ஆப்பிள்: 
                   வாழைத்தண்டு-கீரை: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.

கொள்ளு:
                      ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை:
                                  கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

மிளகு:
               வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

சாம்பார் வெங்காயம்:
                     சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

கோடாம்புளி:
                              நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக  பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

சீரகம் :
               அதிமதுரம்:தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
                 ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.
                கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.

செம்பருத்தி,ரோஜா இதழ்கள்:
                       செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து  50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி, ஏலக்காய்:
                     இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை:
                  சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

தினசரி உணவு பழக்கம் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா.........


தினசரி உணவு பழக்கம் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்


சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?



  • உடல் எடை மிகுந்தவர்களுக்கே மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற தொல்லைகள் வருகின்றன. இவை வாத நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்து உணவுத்திட்டத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.
  • மூட்டு வீக்கத்திற்கு மேலும் மேலும் மருந்துகள், புது வைத்தியம் என்று பார்ப்பதை விட சரியான சத்துணவு மூலம் மூட்டு வீக்கம், மூட்டு வலி முதலிய துன்பங்களை எளிதில் வென்று இயல்பாக வாழலாம்.
  • சிவப்பு இறைச்சி (Red Meat) கொழுப்பு நீக்காத பால் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள், எண்ணெயில் வேக வைத்த மாவுப் பண்டங்கள், மிட்டாய், கேக் வகைகள் முதலியவற்றிற்கு எடை அதிகரிக்கும் போதே முழுத் தடைபோட வேண்டும். அதாவது, இவற்றை எல்லாம் ருசிக்காகக் கூடத் தொடக்கூடாது.
  • இந்த உணவுப் பொருட்களின் உள்ள கொழுப்புச் சத்தால் எலும்பு இணைப்புகளில் அழற்சி ஏற்படுகிறது. மூட்டுவலி உண்டாகி வலிக்கிறது. சிலருக்கு மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த உணவு வகைகள் அதிகமானால் மூட்டு வீக்கமும் அதிகமாகும்.
  • ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒமேகா-3 மீன் எண்ணெயைச் சாப்பிட்டுக் குணமடைகிறார்கள். இந்த எண்ணெய் மூட்டு வலியை உண்டு பண்ணும் இரசாயனப் பொருட்களை உடலில் இருந்து குறைத்துக் கட்டுப்படுத்தி வைக்கிறது.
  • வாத சம்பந்தமான நோயாளிகள் இறைச்சி வகைகளுக்குப் பதிலாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • குருத்தெலும்பில் உள்ள இணைப்புகள் பிறழ்வது மூட்டு வீக்கத்திற்கு மிக முக்கியமான காரணம். இந்த எலும்பு இணைப்புகள் கெட்டுப் போகாமல் பழுதுபட்டு விடாமல் இருக்க தினமும் வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, தக்காளி முதலியவற்றைச் சேர்த்து வரவேண்டும். வைட்டமின் சி உணவு வகைகள் குறைவாக இடம் பெற்றால், அந்த நாட்களில் மட்டும் வைட்டமின் சி மாத்திரையைத் தனியாகச் சாப்பிடலாம்.
  • எலும்புகள் தேய்ந்து மெல்லியதாக மாறினால் அதுவும் உடல் நலனுக்கு நல்லது அல்ல. பெண்களில் பலருக்கு எலும்பு அழற்சி ஏற்படுவது இதனால்தான். எனவே, எலும்புகள் சரியான வளர்ச்சியுடன் ஆரோக்கியமாகத் திகழ ஈரல், முட்டை, பால் முதலியவற்றை நன்கு சேர்த்து வரவேண்டும். இவற்றில் உள்ள ‘டி’ வைட்டமின் எலும்புகள் தேய்ந்து போகாதபடி பாதுகாத்துக் கொள்ளும்.
  • இஞ்சியையும், வெள்ளைப் பூண்டையும் தினமும் உணவில் சேர்ப்பதும், சுக்குக்காபி குடிப்பதும் வாத சம்பந்தமான மூட்டுவீக்கம், வலி முதலியவற்றை நன்கு குறைத்துவிடும்!
  • மூட்டு வீக்க நோயாளிகள் சாதம், சப்பாத்தி, தயிர், மீன், சிட்ரஸ் பழங்கள் முதலியவற்றை விடாது தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
  • மேற்கண்ட உணவு வகைகளுடன் சோயா பீன்ஸ், மாம்பழம், காரட், டர்னிக் கீரை, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், காலிஃப்ளவர், காளான், ராகி, பேரீச்சம்பழம், நண்டு, சிப்பி நண்டு, வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் அவ்வப்போது சேர்த்து வந்தால் இவற்றில் உள்ள கால்சியம், செம்பு, வைட்டமின் ஏ, டி மற்றும் பாந்தோனிக் அமிலம் போன்றவை எலும்புகளில் பிறழ்வு ஏற்படாமல் பாதுகாப்புடன் மூட்டுவலி உபாதையை முற்றிலும் தணிக்கும்.
  • எடையை அதிகரிக்க விடாமல் சரியான சத்துணவையும் பின்பற்றினால் மூட்டுவலி, மூட்டு வீக்கம் முதலியவற்றிலிருந்து முழு விடுதலை உண்டு.


பெண் உருவத்தில் பூக்கள் பூக்கும் அதிசய மரம்

                           தாய்லாந்து நாட்டிலே ஒரு அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன. இந்த வினோத மரம் Nareepol என்றழைக்கப்படுகிறது.  

                            Naree  என்றால் மலாய் மொழியில் பெண் என்றும்,   pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது.  

                              இது தாய்லாந்து நாட்டிளுள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கீ.மீ தொலைவில் petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன.






சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் :




நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.


செர்ரி

செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.



கொய்யா

கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.


நாவல் பழம்

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச் பழங்கள்




மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.




பெர்ரிப் பழங்கள்



நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.



ஆப்பிள்


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி


அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது. 



பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.





பப்பாளி



பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.




அத்திப்பழம்




அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.




ஆரஞ்சு



சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி' இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.




தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.



கிரேப் ஃபுரூட்


ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.




மாதுளை


அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.



பலாப்பழம்



பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.



நெல்லிக்காய்

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி' மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.



முலாம்பழம்

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.



நட்சத்திரப் பழம்


இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா

நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.

உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.