பால் அல்வா
தேவையானவை
காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.
தேங்காய் லட்டு

துருவிய உலர்ந்த தேங்காய் - 3 கப் சர்க்கரை - 2 கப் பால் - 1 கப்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிர வைத்தால், சூப்பரான தேங்காய் லட்டு ரெடி.
சாக்லெட் பர்பி
தேவையானவை
மைதா - 3/4 கப்
கோகோ பவுடர் - 1/2 கப் (அ) சாக்லெட் பார் (பெரியது) - 1
சர்க்கரை - 11/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் மைதாவை போட்டு நன்றாக வறுக்கவும்.
இந்த கலவையை தனியாக வைத்து மற்றொரு பாத்திரத்தில் சக்கரை பாகு செய்துக்கொள்ளவும்.
இந்த சக்கரை பாகில் கோகோ பவுடர் (அ) துருவிய சாக்லெட், வறுத்த மைதா ஆகிவற்றை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டின் மீது கொட்டி, சமமாக பரப்பி சிறிது நேரம் கழித்து துண்டுகளாக வெட்டினால் சுவையான சாக்லெட் பர்பி தயார்.
பன்னீர் கோகனட் லட்டு

தேவையானவை
பன்னீர் - 250 கிராம்,
பொடித்த சர்க்கரை - 1/4 கப்
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்
தேங்காய் - ஒரு மூடி
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை
பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும்.
அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து, அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.

தேவையான பொருட்கள்:
பால் - 2 1/4 கப், பாசிப்பருப்பு - 1/3 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், முந்திரி - 6, நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதே வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறி விட்டு இறக்கி, நன்கு குளிர விட வேண்டும்.
- பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி
தேவையானவை
திணை - 3/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - தேவைகேற்ப
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
செய்முறை
திணை மற்றும் பாசி பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்
குக்கரில் வறுத்த திணை, பாசிபருப்பை 3 கப் தண்ணீரில் 4 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதனோடு வெல்ல பாகு,ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கவும்
ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து திணை சக்கரை பொங்கலுடன் சேருங்கள்.
No comments:
Post a Comment